Breaking News

2017 இன் முதலாம் தவணை நாளை நிறைவு !

அரச, அரசஅங்கிகாரம் பெற்ற தமிழ், சிங்களப் பாடசாலைகளினது 2017 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளையுடன் (5) நிறைவடைவதாக அமைச்சு அறிவித்துள்ளதுடன் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை , முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் 6ஆம் திகதி வியாழக்கிழமை நிறைவடைவதுடன், இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.