நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும்!
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களுக்கு தேர்தல் சீர்திருத்தத்தின் போது நியாயம் கிடைக்கும் வகையில் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் வி ராதாகிருஸ்ணன் ஆகியோர் இன்று ஜனாதிபதியை சந்தித்த போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்ற 20வது திருத்தம், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் போது 237க்கு பதிலாக 255 ஆசனங்களை கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு வழிவகுக்கப்படும்.
இந்தநிலையில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமருக்கு உறுதியளித்தமை தொடர்பாக ஜனாதிபதியிடம் வினவிய போது விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
எனினும் திகதியை குறிப்பிட முடியாது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.



