Breaking News

பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படம்


பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படத்தை பதிவு செய்து வெளியிட்ட இரு கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ளது.
  
இன்று உலகமே பேஸ்புக்கில் மூழ்கிப்போய் உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் பட்டாளம் பேஸ்புக்கை அதிக அளவில் பயன்படுத்திவருகின்றனர்.

பேஸ்புக் விதிமுறைப்படி, நிர்வாண புகைப்படம், ஆண் பெண் உறவு புகைப்படம்,  ஆபாச புகைப்படம் போன்றவைகளை பதிவேற்றம் செய்யப்படக்கூடாது.

ஆனால், இதை எல்லாம் மீறி வக்கிரம் பிடித்த சிலர் பேஸ்புக்கை தவறாக பயன்படுத்தி வருவதும் உண்டு. அதற்கு உதாரணாக, இரண்டு பேஸ்புக் எல்லை மீறி செயல்பட்டு நடவடிக்கைக்கு உள்ளானது.

அதில் ஒரு பேஸ்புக் பக்கம் பெயர் சின்ன பொண்ணு வெறியர்கள் என்ற தலைப்பு கொண்டது, அதில், சிறுமிகள் புகைப்படத்தின் மேலே, அந்த சிறுமியை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று வக்கிரமான கேள்விகளை கேட்டுள்ளனர்.

மற்றொரு பேஸ்புக்பக்கம், சின்ன பொண்ணை கற்பழிப்போம் என்ற அறுவறுப்பான பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சற்று அதிக வயதுடைய சிறுமிகள் படங்களை போட்டு, ஆபாச கேள்விகளை கேட்டுள்ளனர்.

மேலும், இந்த சிறுமிகளை, எத்தனை பேர் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்யப்போகிறீர்கள் என்று வக்கீரமான கேள்விகளை முன்வைத்து போஸ்ட் செய்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ந்து போன பேஸ்புக் ஆர்வலர்கள், இந்த பக்கத்தில் உள்ள தகவல்களை அப்படியே எடுத்து, பேஸ்புக் அட்மினுக்கு புகாராக அனுப்பிவைத்தனர்.  இதனையடுத்து இந்த பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிர்வாகத்தினர், இது போன்ற ஆபாச பதிவுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும், தவறான நபர்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும், ஆபாச பதிவுகளை கண்காணித்து அவற்றை உடனே பேஸ்புக் நிர்வாகத்தினர் முடக்க வேண்டும் என்றும், சைபர் க்ரைம் காவல்துறையினரும் விழிப்புடன் செயல்பட்டு, இது போன்ற சமுதாயத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.