Breaking News

இன்றிலிருந்து கடவுச்சீட்டுக்களில் விரல் அடையாளம் !

இன்று முதல் புதிய கடவுச்சீட்டு முறை அமுல்ப்படுத்தப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடைமுறையே இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிடுகின்றார்.இருப்பினும், 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் இவ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.