24 மணிநேரத்தில் 2 கோடி ரூபாவை சமபாதித்த அதிவேக நெடுஞ்சாலை
சென்ற வெள்ளிக்கிழமையன்று (15) மாத்திரம், அதிவேக நெடுஞ்சாலை மூலம் கிடக்கபெற்ற வருமானம் ரூபா 17,600,000 என அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளரான எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார். அன்றைய தினத்தில் மாத்திரம், இவ்வதிவேக நெடுஞ்சாலையில் 557,023 வாகனங்கள் பயணித்துள்ளன என்று தெரிவித்தார்
மேலும் பெரும்பாலான வாகனங்கள் கடவத்தையூடாகவே, அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்துள்ளன என்றும் கூறினார். குறித்த தினங்களில் 23 விபத்துகள் ஏற்பட்டதாகவும் , 100 தொழில்நுட்பக் கோளாறுகள் இடம்பெற்றதகவும் அவர் கூறினார்.