நாவற்குடா புனித சின்ன லூர்து அன்னை ஆலய 2016 வருடந்த திருவிழா திருப்பலி ( VIDEO & PHOTOS )
(என்டன்)
மட்டக்களப்பு நாவற்குடா புனித
சின்ன லூர்து அன்னை ஆலய 2016 வருடந்த
திருவிழா திருப்பலி மிக
சிறப்பாக இன்று இடம்பெற்றது .
ஆலய திருவிழா கடந்த 13.05.2016 வெள்ளிக்கிழமை மாலை பங்கு தந்தை பயஸ் பிரசன்னா தலைமையில் கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு
அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெற்றது.
21.05.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனியும் அதனை
தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது .
ஆலய திருவிழா திருப்பலி இன்று
ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு
மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய பங்கு தந்தை அருட்பணி
.எக்ஸ் .ஐ . ரஜீவன் தலைமையில் , அருட்தந்தை இன்னாசி ஜோசப் , பங்கு தந்தை பயஸ் பிரசன்னா
ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
.
திருவிழா திருப்பலியின் இறுதி நிகழ்வாக ஆலய முன்றலில் அருட்பணி .எக்ஸ் .ஐ . ரஜீவன் தலைமையில் இடம்பெற்ற விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா திருநாள்
கொடி இறக்கப்பட்டு ஆலய வருடாந்த
திருவிழா இனிதாக நிறைவுபெற்றது.