மக்களின் உடமைகளை பாதுகாக்க படையினரை அமர்த்தவும் ; பிரதமர்
கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமையினை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 15 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இவர்கள், கொழும்பின் பல இடங்களிலும் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கைவிடப்பட்ட வீடுகள் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் அமர்த்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.