Breaking News

இலங்கையில் இறுகட்ட போரில் தடை செய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகள் (Cluster Bombs) !

வடக்கின் இறுதிப் போரில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்த ப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை இங்கிலாந்தின் theguardian ஊடகம் வெளியிட்டுள்ளது.

(https://www.theguardian.com/world/2016/jun/20/cluster-bombs-used-sri-lanka-civil-war-leaked-photos-suggest)  யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நிலக்கன்னிவேடிகள் அகற்றல் நடவடிக்கைகளின் போது கண்டு பிடிக்கப்பட்ட  இவ்வகை குண்டுகளின் கோதுகளே, இவ்வகையான  தடைசெய்யப்பட்ட  குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைகான சந்தேகத்தைத் தருவதாக, அவூடகம் தெரிவித்துள்ளது. மேலும் இக் குண்டுகளின் சிதைவுகள்,  அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த சூனியப் பிரதேசங்களில்லும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில பிரதேசங்களிலும், சாலை பிரதேசத்துக்கு அண்மையிலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் கண்டுடெடுக்க பட்டுள்ளதாகவும் அவ்வூடகம் தெரிவிக்கிறது.