Breaking News

12 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அதிபர் ஆசிரிய, ஆசிரியை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 12 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளக்கிய சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட, அதே பாடசாலையின் அதிபர் உட்பட 5 பேரை எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று (19) உத்தரவிட்டார். அப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்,  இச்சம்பவத்தை மறைப்பதற்கு முயற்சித்த பாடசாலையின் அதிபர் மற்றும் 3 ஆசிரியைகள் உட்பட்டவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.