Breaking News

15 மணித்தியாங்கள் தாமதித்ததால் பயணிகளுக்கு தலா 96,960 ரூபா நட்ட ஈடு !

விமான சேவைப் பணியாளரொருவர் கடமைக்கு சமூகமளிக்க தாமதமாகியதால்  ஃப்ராங்க்ஃபர்ட்டில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 எனும் விமானம் 259 பயணிகளுடன் 15 மணித்தியாலங்கள் தாமதித்தே பயணத்தினை ஆரம்பித்தது.

எனினும் பயணநேரம் தாமதமான காலப்குதியில் பயணிகளுக்கு, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குறித்த தாமதத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பையும் கோரியுள்ளது.

எவ்வாறாயினும் விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளுக்கு அமைய மூன்று மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் தாமதம் ஏற்படும் பட்சத்தில்  பயணிகளுக்கு நட்ட ஈட்டை வழங்கவேண்டும். அதற்கமைய பயணியொருவருக்கு செலுத்த வேண்டிய தொகை 96,960 ரூபாவாகும்.