Breaking News

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்ய 26வரை மீண்டும் சந்தர்ப்பம் !!

இலங்கை போக்குவரத்து சபயில் கடமையாற்றும் ஊழியர்கள் தமது சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா செய்வதற்கான மற்றுமொரு சந்தர்ப்பத்தினை போக்குவரத்து சபை வழங்கியுள்ளது. ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகையானது அதிகரிக்கப்பட்டதயடுத்தே இவறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பதவியை இராஜினாமா செய்வதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு ஓய்வுபெறுபவர்களு ஒரு மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பவுள்ளதோடு நட்டஈடும் செலுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.