Breaking News

கனடா செல்லவென கொழும்புக்கு சென்ற வேன் மீது காட்டு யானை தாக்கியதில் 5 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழப்பு 8 பேர் காயம் !!


கனடா செல்லவென கொழும்புக்கு சென்ற வேன் மீது காட்டு யானை தாக்கியதில் 5 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழப்பு 8 பேர் காயம் !!

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா செல்வதற்காக 11 பேருடன் கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று அதிகாலை 1.30 அளவில் காட்டு யானையின் தாக்குதலிற்கு இலக்காகியதால் 5 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளத்துடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ் வேன் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் கருவலகஸ்வெ பகுதியூடாக பயணிகும் போது வேனில்  மோதுண்ட யானையானது வேனைத்தாக்கியத்தவும் இத்தாகுத்தலில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் இதன்போது காயமடைந்தோர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருந்த சிறுபிள்ளையானது மேலதிக சிகிச்சைக்கென  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது .