Breaking News

'விஷ ஊசி ஏற்றப்பட்ட ஐந்து பேரைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை' !!!

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். 

இது குறித்தது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் விஷ ஊசி ஏற்றப்பட்டதை உறுதிப்படுத்தத்தக்க சாட்சிகளைத் திரட்டுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாகவும், ஆனால் குறித்த விஷ ஊசி ஏற்றப்பட்டதால், இது வரை 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் கூறப்பட்ட போதிலும், இதுவரை 5 பேரைக் கூட அடையாளம் காண முடியாமல் போயுள்ளதாகவும், அதற்காக, விஷ ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் பொய்யானது என்று என்னால் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.