ஆடுகளை வேலைக்கு அமர்த்த தீர்மானித்துள்ள கூகுள் நிறுவனம்
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப அலுவலகமான கூகுள் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு ஆடுகளை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஸ்ட்ரீட் வியூ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதில் 360 வியூவில் இடங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய ஆடுகளைப் பணியில் அமர்த்த கூகுள் திட்டமிடப்பட்டுள்ளது. தீவுகள் மற்றும் மனித நடமாட்டம் குறைவான இடங்களில் ஆடுகளில் கேமிராவினை பொருத்தி அதன் மூலம் ஸ்ட்ரீட் வியூ செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பல மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டதாகவும், இதுவரைஆடுகள் மூலம் 18 தீவுகள் குறித்த தகவல்களைப் சோதனை முயற்சியாக பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.