Breaking News

கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் சுமத்திய பெண் !!

இலங்கை கிரிக்கெட் உலகில் பெரும் புயலை எழுப்பும் வகையில் பெண் ஒருவர் பாலியல் புகாரை கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வர்த்தக பிரிவின் முகாமையாளராக பணியாற்றியவர் காயத்திரி விக்ரம சிங்க.

இவரிடம் கிரிக்கெட் நிறுவனத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா உள்பட சில அதிகாரிகள் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

அதோடு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறி உள்ளார்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.