Breaking News

இந்திய காவல்துறையயே உலுக்கிய கணவனை கொலைசெய்ய மனைவி கையாண்ட பக்கா திட்டம் !

மிக கொடூரமாகவும் பக்காவாகவும் திட்டமிட்டு கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை கொலை செய்தார் ஜீவராணி என்கிற பெண்.

மாதத்தில் இருபது நாட்கள் ஊர் ஊராக சென்று மருந்து வியாபாரம் செய்பவர் கணவர்சீனிராம். இவரின் மனைவிதான் கள்ளகாதலன் சீனியோடு சேர்ந்து கணவனை கொலை செய்தவர். இந்த கொலைக்கு கள்ளகாதலன் போட்டு கொடுத்த ரூட் தான் பகீர் ரகம்.

சீனி ஒரு எலக்ட்ரானிக் மெக்கானிக். உடைந்த டுயூப் லைட்டை கொஞ்சமாக உடைத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து கொண்டு தினமும் சாப்பாட்டில் கலந்து கணவனுக்கு கொடுக்கும் ஐடியா.

ஜீவராணி அப்படியே செய்துள்ளார்.இந்த லைட் பவுடர் குடலில் தங்கி அரிக்க ஆரம்பித்து இரண்டு மாதங்களில் குடலை அறுத்து தள்ளி ரத்த வாந்தி எடுத்துள்ளான் கணவன் சீனிராம்.அதிக வயிறு வலியும் வர மாத்திரை வாங்கி கொடுத்து சமாளித்துள்ளார் அன்பு மனைவி .

ஒரு இரவில் ரத்தம் பேதியாக போய் இரவே இறந்து விட்டான். யாருக்கும் துளி சந்தேகம் வரவில்லை. ஆனால் எட்டு மாதங்கள் கழித்து கள்ளகாதலன் குடித்து விட்டு நண்பர்களிடம் உளற மெல்ல விஷயம் லீக் ஆகி போலீஸ் தூக்கிப்போய் கவனிக்க ஜீவராணியும்  மாட்டியுள்ளார்.

இருவரும் இப்போது உள்ளே. முற்றிலும் புத்தம் புது டெக்னிக்கில் நடந்த இந்த கள்ளகாதல் கொலை விசாரித்த காவல்துறை அதிகாரிகளையே உலுக்கி விட்டதாம்.