Breaking News

மட்டக்களப்பில் சாரதி ஒருவர் வெட்டிக்கொலை கொலை !!!

மட்டக்களப்பில் நேற்று(15) இரவு ஒரு பிள்ளையின் தந்தையான சாரதி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச்சம்பவமானது மட்டக்களப்பு பார் வீதியை அண்மித்துள்ள ஆனந்தா  ஒழுங்கையிலேயே இடமெபெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் ஒரு பிள்ளையின் தந்தையான சோமசிறி விஜித் ஜெயந்த் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.