Breaking News

சொந்த மகனுடன் மகளையும் சேர்த்து திருமணம் செய்து கொண்ட தாய்

அமெரிக்காவின் ஓகலஹோமா மாநிலத்தை சேர்ந்தவர் பாட்ரிசியா ஸ்பான் (43). இவர் கடந்த மார்ச் மாதம் தனது மகளான மிஸ்ட்ரி ஸ்பானை (25) சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மனித சேவை துறையினர் பாட்ரிசியாவின் வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியானது. அதாவது கடந்த 2008ம் ஆண்டு தனது மகனையும் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

முறைகேடாக திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பேட்ரியா கூறும்போது, நான் எவ்வித சட்டத்தையும் மீறவில்லை. எனது மகளின் பிறப்பு சான்றிதழில் எனது பெயர் இல்லாத காரணத்தால் இந்த திருமணம் பெரிய பிரச்னையாக தெரியவில்லை என்றார். தற்போது திருமணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.