வசீம் தாஜுதீனின் உடற்பாகங்களை DNA பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு !!
கொலை செய்யப்பட்ட வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போயுள்ள நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நடாத்திய (SAITM) சோதனையில் மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து கைப்பற்றிய சுமார் 26 உடற்பாகங்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் வசீம் கொலை இடம்பெற்ற அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் இடம் பெறுவதாக நேற்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது