Breaking News

பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஜேர்மனிய பெண் கைது !!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை மருதனார்மடம் பஸ் தரிப்பிடக் கட்டடத்தில் ஒட்டிய குற்றச்சாட்டில், ஜேர்மனில் இருந்து  வருகை தந்துள்ள பெண்ணொருவர் நேற்று(11) இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த குறித்த சுவரொட்டிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த சுன்னாகம் போலீசார் மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கமெரா பதிவின் அடிப்படையில் இந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.