கவர்ச்சி நாயகி கிம் காதர்ஷியான் ஹாப்பி…..
அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகியான கிம் கர்தாஷியான். இவர் பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் இவருடைய வைர மோதிரம் உள்பட சுமார் 10 மில்லியன் யூரோ மதிப்புடைய நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களை பாரிஸ் நகர போலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் கிம் தங்கியிருந்த ஹோட்டல் அருகே அவரது வைர மோதிரத்தை வழிபோக்கர் ஒருவர் கண்டெடுத்துள்ளதாக போலீஸார் அவரிடம் தெரிவித்தனர்.
கொள்ளயடிக்கப்பட்ட அந்த மோதிரத்தில் கொள்ளையர்களின் கைரேகை அல்லது டி.என்.ஏ உள்ளதா என போலீஸார் சோதனையிட்டு வருகிறார்கள்.
கடந்த வாரம் பாரீஸில் உள்ள ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் கிம் கர்தாஷியான் தங்கியிருந்தபோது இந்த பயங்கர கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இந்த விவகாரத்தில் பாரிஸ் போலீஸார் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
தற்போது கொள்ளை போன நகைகளில் தனது கணவர் அன்பளிப்பாக தந்த நிச்சயதார்த்த மோதிரம் திரும்பி கிடைத்ததால் கிம் சந்தோஷத்தில் உள்ளாராம்.