Breaking News

குழந்தைகளுக்கு விரும்பி உண்ணும் பால் ரவா கேசரி !!

உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், பால் மற்றும் ரவையைக் கொண்டு கேசரி செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்: 


ரவை - 1/2 கப் 

சர்க்கரை - 3/4 கப் 

பால் - 2 கப் 

நெய் - 2 டேபிள் ஸ்பூன் 

ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை 

குங்குமப்பூ - சிறிது 

முந்திரி - 10 உலர் 

திராட்சை - 10



செய்முறை: 



* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 



* அதே வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

* பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். 


* ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். 


* பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும். 


* ரவையானது நன்கு வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும். 


* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், பால் ரவா கேசரி ரெடி!!!