அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு !!
நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் இன்றும், நாளையும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாடசாலைகளில் புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்கென 640 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.