வாகரை பிரதேசத்தில் அரசகாணிகள் விக்கப்படுவதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் !!!
வாகரை பிரதேச செயலகத்தின்கீழ் உள்ள கதிரவெளி, புச்சாக்கேணி, புதூர் போன்ற பகுதிகளில் காணப்படும் அரச காணியினை சட்டவிரோதமானமுறையில் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்தும், குறித்த பகுதிகளில் இடம்பெற்றுவரும் காடழித்தலை தடுக்கக்கோரியும், குறித்த பகுதிகளில் காணப்படும் அரச காணிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் போன்ற பிரதான கோரிக்கை முன்வைத்து பிரதேசமாக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவு பூட்டி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமையால் அலுவலக நடவடிக்கைகள் சுமார் ஒரு மணிநேரம் ஸ்தம்பித்தது சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதேச செயலாளரிடம் மக்கள் மகஜரை கையளித்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை பிரதேச செயலாளர் ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து செயலகத்தின் பிரதான வாயிற் கதவினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களினால் திறக்கப்பட்டு பிரதேச செயலக அலுவலர்களை உள் நுளைய அனுமதி வழங்கினர்.