Breaking News

தீபிகா படுகோனே நடிக்கும் படப்பிடிப்பில் அமளி துமளி !!!

தீபிகா படுகோனே நடித்த இந்தி படப்பிடிப்பில் சிலர் புகுந்து ரகளை செய்தார்கள். டைரக்டர் தாக்கப்பட்டார். படப்பிடிப்பு அரங்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தி பட உலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தற்போது, 'பத்மாவதி' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோனே, சாஹித்கபூர், ரன்வீர்சிங் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்தது.

அப்போது ஜெய்ப்பூரில் உள்ள கார்னி சேனா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து சஞ்சய் லீலா பன்சாலி உள்பட படப்பிடிப்பு குழுவினர் சிலரை அடித்து உதைத்ததாகவும், படப்பிடிப்பு அரங்குகளையும் அவர்கள் அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஜெய்ப்பூரில், 1300-ம் ஆண்டுகளில் வாழ்ந்த வீரப்பெண்மணி, பத்மாவதி. இந்து மதத்தை சேர்ந்த இவர் முஸ்லிம் மன்னர் ஒருவரை மணந்து கொண்டதாகவும், அவருடைய வாழ்க்கை வரலாறைத்தான் 'பத்மாவதி' என்ற பெயரில் சஞ்சய் லீலா பன்சாலி படமாக்கி வருவதாகவும் கருதி, கார்னிசேனா அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

''ஜெர்மனிக்கு போய் ஹிட்லரை விமர்சித்து படம் எடுக்க முடியுமா?'' என்று தாக்குதல் நடத்தியவார்கள் ஆவேசமாக கேட்டதாக படக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.