Breaking News

எதிர் பார்க்கப்படும் வரட்சியை முகங்கொடுக்கத்தக்க திட்டம் தயார் !

இவ்வாண்டில் நாடு எதிர்கொள்ளவுள்ள வரட்சியினை சமாளிப்பத்துக்கான திட்டங்கள் தயார்நிலையில் உள்ளதாக கமத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் ரொஹான் விஜேகோன் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் அரிசித்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் வகையில் இரண்டரை மாதங்களில் அறுவடையை செய்யக்கூடிய பீ.ஜீ.250 ரக நெல்லைப் பயிரிடுவதன் மூலம் விவசாயிகளிடமிருந்து ஆயிரம் புசல் நெல்லைக் கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.