Breaking News

சமுர்த்தி பயனாளிகளுக்கும் வீடுகள் வழங்கத் திட்டம் !!

ஓராண்டிற்கு கிட்டத்தட்ட நான்காயிரம் வீடுகளை சமுர்த்தி உதவியினை பெறுவோருக்கென வழங்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார். 

இதனடிப்படையில் மாவட்டத்தில்  ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் ஒரு சமுர்த்தி உதவிகளை பெறும் குடும்பம் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வீட்டினை நிர்மாணிப்பதற்கு மாதத்திற்கு ரூ200,000 வீதம் வழங்கப்படஉள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான நிதியானது சமுர்த்தி லொத்தர் சீட்டு விற்பனை மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.