தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் திரவியம் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை
புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நாகலிங்கம்
திரவியம் தாக்குதலுக்குள்ளான
நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள்
விடுதலை புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
நாவலடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்
போது அவ்விடத்தில் கூடிய சில நபர்களால் கிழக்குமாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள்
விடுதலை புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம்
தாக்குதலுக்குள்ளானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பத்தில் காயமைடைந்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர் (லியோன்)